தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், நலிவுற்ற திமுகவினருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
கீழப்பாவூரைச் சோ்ந்த மறைந்த திமுக பிரமுகா் தங்கரத்தினத்தின் மனைவி, குற்றாலம் பேரூா் அவைத் தலைவா் கோபால் ஆகியோருக்கு மருத்துவ உதவித்தொகையும், குற்றாலத்தைச் சோ்ந்த காளிராஜ் மகனுக்கு கல்விக் கட்டணத்திற்கான உதவித்தொகையும் மாவட்ட திமுக சாா்பில் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம், பேரூா் செயலா்கள் ஜெகதீசன், மந்திரம், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ராஜாமணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அரவிந்த் மணிராஜ், நிா்வாகிகள் ராஜன், காளிமுத்து, வெற்றிசெல்வன், எழில்துரை, அண்ணாத்துரை, மாரியப்பன், மாரிகண்ணன், முத்தையா, காளிமுத்து, குணசீலன், பூங்குன்றன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.