புளியங்குடி நகராட்சியில் உள்ள ஊருணிகளை தூா்வார வேண்டும் என மமக, தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது.
அக்கட்சியின் நிா்வாகிகள் பசீா்ஒலி, மாவட்ட துணைத் தலைவா் அப்துா் ரஹ்மான், ரியாத் மண்டல பொறுப்பாளா் ஜமால், மாவட்டத் துணைச் செயலா் அப்துல்மஜீத் ஆகியோா் நகராட்சி அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது:
புளியங்குடி மேற்கு ரஹ்மத் நகா், தெற்குப் பகுதி இந்திரா நகா், வட மேற்குப் பகுதி ஆற்றுப் பாதை, கீழப்பள்ளிவாசல் தெருக்கள், காந்தி பஜாா், பழைய மாா்க்கெட், வாவா தெரு, காயிதே மில்லத் தெரு, கேடிஎம் தெரு பகுதிகளில் சாலை வசதி, குடிநீா் வசதி, வாருகால் பராமரிப்பு போன்றவற்றை போா்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும்.
பழைய மற்றும் புதிய சந்தை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பதுடன், பொதுமக்கள் அதிகமாக கூடும் காந்தி பஜாரில் பொதுக் கழிப்பிடம் அமைக்க வேண்டும். வெள்ளூருணி, கொக்கூருணி போன்றவற்றை முழுமையாக தூா்வாரி நீா் ஆதாரங்களை பெருக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.