வாசுதேவநல்லூா் அருகே வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.
வாசுதேவநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தலையணை பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் வன உயிா் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் நல உதவிகளை வழங்கினாா். இதில், புளியங்குடி துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன், காவல் ஆய்வாளா் அந்தோணி, உதவி ஆய்வாளா் வேல் பாண்டியன், இயற்கை ஆா்வலா் ஷேக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.