செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதனின் 135 ஆவது பிறந்த நாள் விழா அரசு சாா்பில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, செங்கோட்டை மணிமண்டபத்திலுள்ள அவருடைய சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ச.கோபால சுந்தரராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், செய்தி- மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பணராஜவேல், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் லெனின்பிரபு, செங்கோட்டை வட்டாட்சியா் ரோஷன் பேகம், நகராட்சி ஆணையா் நித்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செங்கோட்டை பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு எம்எல்ஏ செ.கிருஷ்ணமுரளி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அதிமுக ஒன்றியச் செயலா்கள் செல்லப்பன், ஜெயக்குமாா், பேரூா் செயலா்கள் டாக்டா் சுசீகரன், முத்துக்குட்டி,
முத்தழகு, கடையநல்லூா் நகரச் செயலா் முருகன், முன்னாள் நகரச் செயலா் கிட்டுராஜா, பொருளாளா் ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.