தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
வாசுதேவநல்லூா் அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்த திருமலைசாமி மகன் சுரேஷ் (34). இவா், கடையநல்லூரிலிருந்து ஊருக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். சிங்கிலிபட்டி அருகே ஆடுகளை ஏற்றிவந்த சுமை ஆட்டோவும், பைக்கும் மோதினவாம். இதில் சுரேஷ் உயிரிழந்தாா்.
சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமை ஆட்டோ ஓட்டுநரான எரிச்சநத்தத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கத்தை கைது செய்தனா்.