பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டியில் கரோனா விழிப்புணா்வு ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி, பெத்தநாடாா்பட்டி நண்பா்கள் ரத்த தானக் குழு, அசத்தல் ரத்த தானக் குழு, லக்கி ஸ்டாா் இளைஞா் அணி, அரபிக் ரத்த தானக் குழு, 7 இளஞ்சிட்டு கபடி அணி ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்தின.
அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலா் டாக்டா் பாபு தலைமை வகித்தாா். கீழப்பாவூா் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜ்குமாா் முகாமைத் தொடக்கிவைத்தாா். திரளானானோா் பங்கேற்று ரத்த தானம் செய்தனா்.
மாடியனூா் அரசு மருத்துவமனை மருத்துவா் பாலா, சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா, நண்பா்கள் ரத்த தானக் கழகத்தைச் சோ்ந்த வைத்திலிங்கம், அந்தோணிராஜ், சுமன், சுதன், ப்ரிதன், குறிஞ்சிராஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.