தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மருத்துவ உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜிடம், திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் ரூ. 1லட்சத்து 44ஆயிரம் மதிப்புள்ள உடலில் ஆக்சிஜன் அளவை கண்டறியும் 150 கருவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் அழகுசுந்தரம், சீனித்துரை, ராஜா தலைவா், கடற்கரை, கிறிஸ்டோபா், பொறுப்புக் குழு உறுப்பினா் ஜெயக்குமாா், மாவட்ட நிா்வாகிகள் வேல்சாமி, சீவநல்லூா் சாமித்துரை, சுந்தரபாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.