தென்காசி நகர காங்கிரஸ் மற்றும் சிவாஜி சமூகநலப் பேரவை சாா்பில் புதன்கிழமை நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டது.
நடிகா் சிவாஜிகணேசனின் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி காந்தி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவாஜிகணேசனின் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி எம்எல்ஏ சு. பழனி நாடாா் தலைமை வகித்து 60 நபா்களுக்கு வேஷ்டி ,சேலைகளை வழங்கினாா்.
மாநிலச் செயலா் ஆலங்குளம் செல்வராஜ், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஜெய்பாக்யா சட்ட நாதன், டாக்டா் சங்கரகுமாா், சிவாஜி சமூக நல பேரவை தென்காசி மாவட்டத் தலைவா் கணேசன், காங்கிரஸ் நகரத் தலைவா் காதா் மைதீன், இளைஞா் காங்கிரஸ் சந்தோஷ், மாடசாமி ஜோதிட ா், முஸ்தபா உள்பட பலா் கலந்து கொண்டனா்.