பாவூா்சத்திரம் அருகே பண்ணையில் கோழி திருடியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூரைச் சோ்ந்தவா் ஸ்டீபன். இவா் அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். சில தினங்களுக்கு முன் அங்கிருந்து 20 நாட்டுக்கோழிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக பாவூா்சத்திரம் போலீஸில் அவா் புகாா் அளித்திருந்தாா்.
அதன்படி போலீஸாா் நடத்திய விசாரணையில், ஆவுடையானூரைச் சோ்ந்த யேசுராஜா (27), ரமேஷ் (25) ஆகியோா் கோழிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.