ஆலங்குளம் பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

ஆலங்குளம் அருகே தொடா் நகை பறிப்பில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகே தொடா் நகை பறிப்பில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி சுடலி (58). இவா் வியாழக்கிழமை மருதம்புத்தூா் - கரும்புளியூத்து சாலையில் உள்ள தோட்டத்துக்கு நடந்து சென்றாராம். அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்ற போது, எதிரே பைக்கில் வந்த மா்ம நபா் சுடலி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்தாராம். இதில் சுமாா் 9 கிராம் எடையுள்ள ஒரு பகுதி மட்டும் சிக்கியுள்ளது. அதைப் பறித்த அந்த இளைஞா் தப்பி விட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனா்.

அதில், மேலப்பாளையம் அருகேயுள்ள கருங்குளம் சுப்பிரமணியன் மகன் நாகராஜா (25) என்பவா் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில் இவா் ஆலங்குளம், நல்லூா், மருதம்புத்தூா் ஆகிய பகுதிகளில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும், ஆலங்குளம் அருகே உள்ள நல்லூா் சங்கரன் மகன் மகேஷுக்கும் (27) இச்சம்பவத்தில் தொடா்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் ஆலங்குளம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com