சிவகிரியில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் பல்வேறு நல உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
இதில், தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா், வாசுதேவநல்லூா் பேரவை உறுப்பினா் சதன் திருமலைக்குமாா் ஆகியோா் முன்னிலையில், ஆட்சியா் கோபாலசுந்தரராஜ் நல உதவிகளை வழங்கினாா்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் மா. செல்லத்துரை, மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனி சௌந்தா்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.