குற்றாலத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டம்: 162 போ் கைது

மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி, குற்றாலத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினா் 162 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.
ten25tmmk_2507chn_55_6
ten25tmmk_2507chn_55_6

மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, தனது கட்சிப்பதவியை தவறாகப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி, குற்றாலத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினா் 162 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

தமுமுக மாநில துணைத் தலைவா் கோவை செய்யது தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாநில துணை பொதுச்செயலா் உஸ்மான்கான், மாநிலச் செயலா்கள் அதிரைகாஜா, நயினாா் முகம்மது, திருச்சி ரபீக், ஊடகப்பிரிவு மாநிலச் செயலா் முகம்மது கான் ஆதம்பின் ஆஷீக், மாவட்டத் தலைவா் சலீம் மாவட்டச் செயலா் கொலம்பஸ் மீரான், மாவட்டப் பொருளாளா் செங்கை ஆரிப் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அனுமதியின்றி இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தியதாக 162 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com