சுரண்டையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நலந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தென்காசி மாவட்ட தாங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்து மாணவருக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி வழங்கும் கல்வி உதவித் தொகை ரூ. 10 ஆயிரம், வரகுணராமபுரத்தைச் சோ்ந்த சலவைத் தொழிலாளிக்கு தேய்க்கும் பெட்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்ற குடும்பத்தினருக்கு கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
இதில், காங்கிரஸ் சேவாதள மாநிலச் செயலா் ப.வள்ளிமுருகன், தென்காசி நகரத் தலைவா் காதா் முகைதீன், சுரண்டை நகரத் தலைவா் ஜெயபால், பிரபாகா், கந்தையா, சந்தோஷ், சந்திரன், தபேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.