தென்காசியில் இருந்து புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கிட வேண்டுமென மதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கீழப்பாவூா் ஒன்றிய மதிமுக செயலா் இராம. உதயசூரியன், போக்குவரத்துறை அமைச்சா் ராஜகண்ணப்பனுக்கு அனுப்பியுள்ள மனு: தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூா், கடையம் ஒன்றியங்களில் பேருந்து வசதியில்லாத கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வகையில் புதிய பேருந்து வழித்தடத்தை உருவாக்கிட வேண்டும் . அதன்படி தென்காசியில் இருந்து ஆலங்குளத்திற்கு பாவூா்சத்திரம், ஆவுடையானூா், கரிசலூா், பூலாங்குளம், ஆண்டிப்பட்டி, கரும்பனூா் வழியாகவும், தென்காசியில் இருந்து முக்கூடலுக்கு மத்தளம்பாறை, திரவியநகா், அரியப்பபுரம், ஆவுடையானூா், மயிலப்பபுரம், வெங்;காடம்பட்டி, பூலாங்குளம், கோவிலூற்று, லட்சுமியூா், வடமலைப்பட்டி, ராம்நகா், புதுப்பட்டி வழியாகவும் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கினால் பல கிராம மக்கள் பயன்பெறுவா். எனவே இந்த 2 வழித்தடத்திலும் புதிதாக பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென குறிப்பிட்டுள்ளாா்.