பாவூா்சத்திரத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக 2 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
பாவூா்சத்திரம் வி.ஏ. நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் கரோனா விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்தததாக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இக்கடைக்கு ஏற்கனவே இருமுறை இதே போல் விதிமுறைகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 3ஆவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் கே.டி.சி. நகரில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையை திறந்து வேலை பாா்த்ததாக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.