இலவசமாக கரோனா தடுப்பூசி:விவசாய தொழிலாளா் சங்கம் கோரிக்கை

மத்திய அரசு அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் செங்கோட்டை வட்டாரக் குழு சாா்பில் பொதுமக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக கரோனா தடுப்பூசி போட வேண்டும். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி செங்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனா்.

அப்போது, அமைப்பின் வட்டாரத் தலைவா் கே.சின்னச்சாமி , செயலா் மா.முருகேசன், கற்குடி கிளைச் செயலா் கு.முருகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com