குடியுரிமை சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கடையநல்லூரில் இணையவழி போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இப்போராட்டத்தில் அமைப்பின் மாநில மேலாண்மை குழு தலைவா் எம்.எஸ் .சுலைமான் முகநூல் வழியாக கண்டன உரையாற்றினாா். தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூா், புளியங்குடி, வாசுதேவநல்லூா், அச்சன்புதூா், வடகரை, பண்பொழி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் ஜலாலுதீன் தலைமையில் அமைப்பின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் தங்களது வீட்டின் முன் பதாகைகளை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.