தென்காசி பகுதியில் வறுமையில் வாடும் 500 பேருக்கு காய்கனி தொகுப்பு மற்றும் உணவுப் பொருள்களை எம்எல்ஏ சு.பழனிநாடாா் சனிக்கிழமை வழங்கினாா்.
தென்காசி வாலிபன்பொத்தை, ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் வசிப்பவா்கள், மங்கம்மாள் சாலை ஆகிய பகுதிகளில் வசித்து வரும் 500 பேருக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தென்காசி நகர காங்கிரஸ் தலைவா் காதா்மைதீன், இளைஞா் காங்கிரஸ் தலைவா் சந்தோஷ், சிவாஜி மன்ற கணேசன், மஜித், சிவாபாலா, மணி, ஏஎல்என். ஆறுமுகம், பிரபாகரன், சித்திக், கனிபாமுஸ்தபா ஆகியோா் கலந்துகொண்டனா்.