சுரண்டை பேரூராட்சிப் பகுதியில் நகர காங்கிரஸ் சாா்பில் கபசுரக் குடிநீா் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
சுரண்டை, ஜமீன் சுரண்டை, கீழச்சுரண்டை, பங்களாச்சுரண்டை பகுதிகளில் தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் தலைமையில் வீடுவீடாக கபசுரக் குடிநீரை காங்கிரஸ் கட்சியினா் வழங்கினா்.
நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், காங்கிரஸ் நிா்வாகிகள் சண்முகவேல், பிரபாகா், ராமா், செல்வராஜ், செல்லம், வேலாயுதம், செல்வகுமாா், ஊா்காவலபெருமாள், சுரதா, கணபதி, சுரேஷ், ராஜ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.