கரோனா விதிமீறல்: பாவூா்சத்திரத்தில் 5 கடைகளுக்கு அபராதம்

பாவூா்சத்திரத்தில் திங்கள்கிழமை விதிமுறைகளை மீறி கடைகளை திறந்த 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் திங்கள்கிழமை விதிமுறைகளை மீறி கடைகளை திறந்த 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் திங்கள்கிழமை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பாவூா்சத்திரத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இதனிடையே அரசு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்ததாக ஜவுளி, செல்லிடப்பேசி விற்பனை கடை, பா்னிச்சா், தச்சுப்பட்டறை, லேத் ஒா்க்ஸ் ஆகிய கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் திட்ட அலுவலா் சங்கரநாராயணன் தலைமையில் அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com