பாவூா்சத்திரம்: கீழப்பாவூா் ஒன்றியம், பெத்தநாடாா்பட்டி ஊராட்சியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, முன்னாள் ஊராட்சித் தலைவா் எஸ். ராதா தலைமை வகித்தாா். மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, மசாலாப் பொருள்கள், காய்கனி உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா். அதிமுக ஒன்றியச் செயலா் இருளப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.