தென்காசி: தென்காசி மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் மயிலாடுதுறைக்கு பணியிட மாறுதலாகி செல்வதால் அவருக்கு பிரிவு உபசார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற நிழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளருக்கு ஆட்சியா் கீ.சு.சமீரன், ஏடிஎஸ்பி கலிவரதன், டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மற்றும் காவல்ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்து, வழியனுப்பினா்.