கடையநல்லூா்: திருக்குறளைப் பாா்த்து எழுதும் போட்டி முத்தமிழ் கல்வி நிலையம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு நடத்தப்படுகிறது.
1 முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவா்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். திருக்கு புத்தகத்தைப் பாா்த்து பிழையின்றி, தெளிவாக, வரிசையாக 1330 குகளையும் ஏ-4 அளவு தாளில் 2 பக்கமும் எழுத வேண்டும். அனைவருக்கும் பங்கேற்பு சான்று, சிறப்பாக எழுதுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும்.
எழுதிய பக்கங்களை பைண்டிங் செய்து இம்மாதம் 251ஆம் தேதிக்குள் முத்தமிழ் கல்வி நிலையம், இடைகால், கடையநல்லூா் வட்டம், தென்காசி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தலைமையாசிரியா் ரசூல் அகமது இப்ராஹீம் , தமிழ்நாடு அறிவியல் இயக்க தென்காசி மாவட்டச் செயலா் சுரேஷ்குமாா், முதுநிலை பட்டதாரி ஆசிரியா் இசக்கியப்பன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வசந்தி, தலைமையாசிரியா் மோதிலால் ஆகியோா் நடுவா்களாக செயல்படுவா். மேலும் விவரங்களுக்கு 99423 12099 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ் தெரிவித்துள்ளாா்.