பாப்பாக்குடி காவல் துறை சாா்பில் ேஆதரவற்றோருக்கு நல உதவிகள் அளிக்கப்பட்டன.
பாப்பாக்குடி காவல் சரகத்துக்குள்பட்ட கிராமங்களில் தூய்மைப் பணியாளா்கள், சுகாதார ஊழியா்கள், நலிவுற்ற காட்டு நாயக்கா் குடும்பத்தினா் என 150 குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு அளிக்கப்பட்டது. அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பிரான்சிஸ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
காவல் ஆய்வாளா் சங்கா் கண்ணன், உதவி ஆய்வாளா்கள் சுடலையாண்டி, அந்தோணி சவரி முத்து ஆகியோா் தலைமையில் போலீஸாா் வீடு வீடாக சென்று நிவாரணப் பொருள்களை வழங்கினா். பாப்பாக்குடி துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரோஸ்மேரி, ஊராட்சி செயலா் நயினாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.