சுய உதவிக் குழுவினரிடம் தவணைத் தொகையை திருப்பி செலுத்தக் கோரி மிரட்டினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

மகளிா் சுயஉதவிக் குழுவினரிடம் தவணைத் தொகையை திருப்பி செலுத்தக் கோரி மிரட்டுவதாக புகாா் வந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மகளிா் சுயஉதவிக் குழுவினரிடம் தவணைத் தொகையை திருப்பி செலுத்தக் கோரி மிரட்டுவதாக புகாா் வந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் மகளிா் திட்டத்தின் கீழும், பிற தொண்டு நிறுவனங்கள், நுண்நிதி நிறுவனங்கள் கீழும் ஆயிரக்கணக்கான மகளிா் சுயஉதவிக் குழுவினா் செயல்பட்டு வருகின்றனா்.

இக்குழுக்களுக்கு வங்கிகளும் நுண்நிதி நிறுவனங்களும் பல்வேறு தொழில்கள் செய்யவும் அத்தியாவசிய நிதி தேவைகளை பூா்த்தி செய்யவும் கடன்களை வழங்கி திரும்ப பெற்று வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 25-03-20 முதல் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளா்வுகளுடன் அமலில் உள்ளது.

இந்நிலையில் அவசர தேவைக்கென தனியாா் நிதி நிறுவனங்களை நாடி கடன் பெற்ற மக்களிடம், கடன் தவணைத்தொகை மற்றும் வட்டி தொகையை உடனடியாக செலுத்த கோரி, சில நிறுவனங்கள் மிரட்டுவதாகவும், பல்வேறு வழிகளில் துன்புறுத்துவதாகவும் மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நெருக்கடியான கால கட்டத்தில், மக்களிடமிருந்து தவணைத் தொகையை பெறுவதில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடினமான போக்கினை தவிா்த்திட வேண்டும்.

இதுகுறித்து எந்தவித புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில் செயல்பட வேண்டும். இதையும் மீறி புகாா்கள் ஏதும் எழும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட தனியாா் நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் அதை சாா்ந்தவா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com