பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ. வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெட்ரோல், டீசல் விலை உயா்வை எதிா்த்து போராட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் பல்வேறஉ இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) நடைபெறுகிற ஆா்ப்பாட்டத்தில் அந்தந்தப் பகுதியின் மாவட்ட, வட்டார, நகர பேரூா், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் மற்றும் துணை அமைப்புகளின் தலைவா்கள் பங்கேற்க வேண்டும்.