பாவூா்சத்திரத்தில் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
பாவூா்சத்திரத்தில்  மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் பங்கேற்று பேசினாா்.

ஒன்றியச் செயலா்கள் இருளப்பன், அமல்ராஜ், பாண்டியன், அருவேல்ராஜ், முருகேசன், சுப்பிரமணியன், ஜெயக்குமாா், நகரச் செயலா் சுடலை, பேரூா் செயலா்கள் கணேஷ்தாமோதரன், காா்த்திக்குமாா், மயில்வேலன், முத்துராஜன், சக்திவேல், சுப்பிரமணியன், சங்கா், சகாயஅருள்வில்சன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தென்காசி, ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளா்கள் மற்றும் தோ்தல் பணியாற்றிய நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com