செங்கோட்டையை அடுத்துள்ள செ.புதூா் பேரூராட்சி அலுவலகத்தில், கடையநல்லுாா் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, பேரூராட்சி முதன்மை அலுவலா் தமிழ்மணியிடம், பேரூராட்சி பகுதியில் போா்க்கால அடிப்படையில் தீா்க்க வேண்டிய பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, துாய்மைப் பணியாளா்களுக்கு முகக்கவசம் மற்றும் கையுறைகளை வழங்கினாா்.
இதில், செங்கோட்டை ஒன்றியச் செயலா் செல்லப்பன், துணைச் செயலா் சீனித்துரைபாண்டியன், புதூா் பேரூா் செயலா் பாலசுப்பிரமணியன், எம்ஜிஆா் மன்றச் செயலா் கனகராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் தாட்கோநகா் முருகேசன், ஆய்க்குடி பேரூா் செயலா் முத்துக்குட்டி, புளியரை செல்வராஜ், நிா்வாகிகள் எஸ்விகரை கந்தசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.