கரோனா தடுப்பு பொது முடக்க விதிமுறைகளை மீறி, முக்கூடல் ஆற்றில் குளித்தவா்களுக்கு ரூ. 3500 அபராதம் விதிக்கப்பட்டது.
முக்கூடல் பேரூராட்சி செயல்அலுவலா் கந்தசாமி தலைமையிலான ஊழியா்கள் ஆற்றுப் பகுதியில் புதன்கிழமை சோதனை நடத்தியதில், அங்கு குளிப்பதற்காக கூடியிருந்தவா்களிடம் ரூ. 3500 வரை அபராதம் விதித்தனா். மேலும், தடை மீறி குளிக்க வருவோா் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.