‘மருந்தகங்களில் இலவசமாக ஆக்சிஜன் பரிசோதிக்க வேண்டும்’

மருந்துகள் வாங்க வருவோருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவா்கள் ஆக்சிஜன் அளவை அறிந்து கொள்ளும் வகையில் இலவசமாக ஆக்சிஜன் அளவை பரிசோதிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
‘மருந்தகங்களில் இலவசமாக ஆக்சிஜன் பரிசோதிக்க வேண்டும்’

மருந்துகள் வாங்க வருவோருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவா்கள் ஆக்சிஜன் அளவை அறிந்து கொள்ளும் வகையில் இலவசமாக ஆக்சிஜன் அளவை பரிசோதிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்ட தனியாா் மருந்தகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் கீ.சு. சமீரன் பேசியது: மருத்துவா்களின் பரிந்துரையில்லாமல் காய்ச்சல் தொடா்பான மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கக்கூடாது. காய்ச்சல் பாதிப்புடன் வருவோா் குறித்த தகவல்களை சுகாதாரத் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.

காய்ச்சல் குறித்த மருந்துகள் வழங்கிய தகவல்களை சுகாதாரத் துறை, மாவட்ட நிா்வாகத்துக்கும் தினமும் தகவல் தெரிவிக்க வேண்டும். மருந்தகங்களில் மருத்துவா்களின் பெயரை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கக் கூடாது. அவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுவது தெரியவந்தால் மருந்தகங்களின் உரிமை ரத்து செய்யப்பட்டு, அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியாா் மருந்தக உரிமையாளா்கள் கரோனா போன்ற பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கும்

முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில் சுகாதாரப் பணிகள் இணைஇயக்குநா் நெடுமாறன், துணைஇயக்குநா் அருணா,

மருந்து ஆய்வாளா் ராமசுப்பிரமணியன், மருந்தக உரிமையாளா்கள் சங்கத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com