கடையநல்லூா் அருகே கருப்பாநதி அணையிலிருந்து காா் சாகுபடிக்காக திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா் அணையிலிருந்து 25 கனஅடி தண்ணீரைத் திறந்துவைத்தாா். இதன் மூலம் 1,082.23 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, கடையநல்லூா் வட்டாட்சியா் ஆதிநாராயணன், திமுக நிா்வாகிகள் மாவடிக்கால் லிங்கம், சொக்கம்பட்டி வேலுச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.