சங்கரன்கோவிலில் 2 ஆம் கட்ட கரோனா நிவாரண நிதி, 14 வகைப் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் சாலையில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, 2ஆம் கட்ட நிவாரண நிதி, அத்தியாவசியப் பொருள்கள் தொகுப்பு ஆகியவற்றை வழங்கினாா். நிகழ்ச்சியில் கூட்டுறவு சாா்பதிவாளா் சுரேஷ், கூட்டுறவு பண்டகசாலை செயலா் கணேசன், வருவாய் ஆய்வாளா் இசக்கிராஜன், மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளா்கள் காா்த்திக், உதயகுமாா், அப்பாஸ் அலி, பிரகாஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.