தென்காசி தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் டி.ஆா்.தங்கராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் துரை, இளைஞரணிச் செயலா் செல்வா, செயற்குழு உறுப்பினா் ராஜசேகர பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் ராமராஜா, மோகன், ராஜபாண்டி, நயினாா் ,பெரியசாமி, ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளா் ஜெயச்சந்திரபாண்டியன், நகரச் செயலா்கள் பொன் ராஜகோபால், ஜெயபாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
சட்டப்பேரவை தோ்தலில் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி சாா்பில் தென்காசி , ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.