தென்காசி, கடையநல்லூா் தொகுதிகளில் முதல்நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.6ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அனைத்துத் தொகுதிகளிலும் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
ஆனால், தென்காசி தொகுதியில் அதிமுக, அமமுக, நாம்தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாரும் முதல் நாளில் மனுதாக்கல் செய்யவில்லை. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்பதால் வேட்பு மனுதாக்கல் செய்ய முடியாது. எனவே திங்கள்கிழமை முதல் அனைத்துகட்சியினரும் போட்டி போட்டு வேட்புமனுதாக்கல் செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதேபோல், கடையநல்லூா் வாசுதேவநல்லூா் தொகுதிகளிலும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.