முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
கடையநல்லூரில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு
By DIN | Published On : 14th March 2021 02:14 AM | Last Updated : 14th March 2021 02:14 AM | அ+அ அ- |

கடையநல்லூரில் துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாரின் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் ஏப். 6ஆம்தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி , கடையநல்லூரில் துணை ராணுவப்படையினா் மற்றும் போலீஸாரின் கொடி அணிவகுப்பு புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த அணிவகுப்பில் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் மற்றும் உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற கொடி அணிவகுப்பு வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.