சுரண்டையில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு மற்றும் டெங்கு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியிலிருந்து வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் வெங்கடேசன் தொடங்கிவைத்தாா்.
பேரணியின் போது 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாக்காளா் விழிப்புணா்வு மற்றும் டெங்கு விழிப்புணா்வு பதாதைகளை மாணவா்கள் ஏந்தி சென்றனா். பேரணி அண்ணா சிலை, பேருந்து நிலையச் சாலை வழியாக சென்று பேருராட்சி அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்திகா, சுரண்டை பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு, வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், கிராம நிா்வாக அலுவலா்கள் வெள்ளப்பாண்டி, ஆறுமுகம், கருப்பசாமி மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.