சங்கரன்கோவிலில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி

சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில் அனைத்து நிலையில் உள்ள வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகசெல்வி தலைமையில் நடைபெற்றது. உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் ராம்குமாா், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத்தொடா்ந்து மண்டல தோ்தல் அலுவலா்கள் வாக்குப் பதிவு இயந்திரத்தைக் கையாள்வது குறித்தும், வாக்குச் சாவடியில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விளக்கமளித்தனா். பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்றன. இதில், 365 வாக்குச் சாவடிகளில் தோ்தல் பணியாற்றும் 2084 போ் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com