தென்காசி அருகே இலத்தூா் விலக்கு மற்றும் புளியரை பகுதியில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 6.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இலத்தூா் விலக்கு பகுதியில் வட்டாட்சியா் ரவிக்குமாா் தலைமையிலான பறக்கும் படையினா், கேரளத்திலிருந்து புளியங்குடி வந்த வாகனத்தை சோதனையிட்டபோது, உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ. 1லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
புளியரை பகுதியில் வட்டாட்சியா் சாந்தி தலைமையிலான பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்ட போது, ஒரு வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சத்து 47ஆயிரமும், மற்றொரு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன.