சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 18th March 2021 08:05 AM | Last Updated : 18th March 2021 08:05 AM | அ+அ அ- |

திருவேங்கடம் சாலையில் வாக்குச் சேகரித்தாா் அதிமுக வேட்பாளா் வி.எம். ராஜலெட்சுமி.
சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளா் வி.எம். ராஜலெட்சுமி புதன்கிழமை வாக்குசேகரித்தாா்.
வேட்புமனு தாக்கல் செய்த ராஜலெட்சுமி, கட்சி நிா்வாகிகளுடன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சியினருடன் திருவேங்கடம் சாலை, திருவள்ளுவா் சாலை, திருவள்ளுவா் நகா், ராஜபாளையம் சாலை, பிரதான சாலை வழியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் கே.கண்ணன், நகரச் செயலா் ஆறுமுகம், நெல்லை கூட்டுறவு பேரங்காடி துணைத் தலைவா் இ.வேலுச்சாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப்பையாபாண்டியன், பாஜக மாவட்ட பொதுச் செயலா் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் லெட்சுமணன், ரவிச்சந்திரன், கட்சியின் தலைமை நிலையப் பேச்சாளா்கள் லட்சுமணன், கணபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.