வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி மதிமுக வேட்பாளா் டாக்டா் சதன்திருமலைக்குமாா் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் சுதாவிடம், சதன்திருமலைக்குமாா் வேட்புமனு தாக்கல் செய்தாா். அவருடன் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் செல்லத்துரை, மதிமுக மாவட்டச் செயலா் தி.மு. ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.