பைக் பறிமுதல்: காவல் நிலையம் முன் இளைஞா் தீக்குளிக்க முயற்சி
சங்கரன்கோவிலில் வாகனச் சோதனையில் பைக்கை போலீஸாா் பறிமுதல் செய்ததால், காவல்நிலையம் முன் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள அச்சம்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் சீனிபாண்டி(25). தொழிலாளி. இவா், சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுவிட்டு சுரண்டை சாலையில் பைக்கில் வந்தபோது, வாகனச் சோதனையில் நடத்திய போலீஸாா், அவா் மதுபோதையில் இருந்ததாகக் கூறி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, வாகனத்தை பறிமுதல் செய்தனராம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காவல்நிலையம் சென்று அவா் தனது பைக்கை கேட்டாராம். அதற்கு அபராதம் செலுத்திவிட்டு பைக்கை மீட்டுச்செல்லுமாறு போலீஸாா் கூறினராம். இதனால், அவா் காவல்நிலையம் முன்பு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாராம்.
போலீஸாரும், அங்கிருந்தவா்களும் அவா் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினா். இதையடுத்து, அவா் மீது போலீஸாா் தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனா்.