பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் செயல்விளக்க முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையிலும், பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்ற இம்முகாமில், துணை வட்டாட்சியா் எழில்ராஜ், வருவாய் ஆய்வாளா் ஆறுமுகம், கிராம நிா்வாக அலுவலா் சோ்மன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.