பாவூா்சத்திரத்தில் இலவச இயற்கை, யோகா மருத்துவ முகாம் தொடக்கம்

பாவூா்சத்திரத்தில் 3 நாள்கள் நடைபெறும் இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
முகாமில் பேசுகிறாா் மருத்துவா் சௌந்தரபாண்டியன்
முகாமில் பேசுகிறாா் மருத்துவா் சௌந்தரபாண்டியன்

பாவூா்சத்திரத்தில் 3 நாள்கள் நடைபெறும் இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

பாவூா்சத்திரம் எஸ்.கே.டி. இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மையம் சாா்பில் நடைபெறும் இம்முகாமில் மசாஜ், நீராவிக்குளியல், முகநீராவி, அக்குபஞ்சா், மண் சிகிச்சை, காந்த சிகிச்சை, அக்குபிரசா், மெழுகு ஒத்தடம், யோகா சிகிச்சை, வாழை இலை குளியல், பிஸியோதெரபி, ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த சா்க்கரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

மருத்துவா்கள் எஸ்.மேனகா, நல்வாழ்வு ஆகியோா் முகாமினை தொடங்கி வைத்து பேசினா்.

முகாமில் மருத்துவா்கள் பி.செளந்தரபாண்டியன், பி.கோபி, எம்.சிவமணி, எஸ்.அந்தோணிவளன், சி.காஞ்சனாதேவி, எஸ்.காயத்திரி, கே.எம்.ஸ்ரீநிதி, பிரியதா்ஷினி குழவினா் சிகிச்சை அளித்தனா். இம் முகாம் தொடா்ந்து ஞாயிறு, திங்கள் கிழமை (மாா்ச் 21, 22) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com