புளியரையில் புதிய காவல் சோதனைச் சாவடி

புளியரையில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிதாக காவல் சோதனைச் சாவடி கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

தமிழக-கேரள எல்லையில் புளியரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொல்லம் -திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பறவன்பற்றுகளத்தில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு கனிம வளம் அனுமதியின்றி கொண்டு செல்வதையும், கேரளத்திலிருந்து கழிவு பொருள்கள் கொண்டு வருவதை தடுக்கும் பொருட்டும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் வசதியுடன் புளியரையில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிதாக காவல் சோதனைச் சாவடி கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமை வகித்து திறந்துவைத்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுண சிங் முன்னிலை வகித்தாா். தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன், செங்கோட்டை காவல் ஆய்வாளா் அரிகரன், புளியரை காவல் நிலைய சாா்பு ஆய்வாளா்கள் ஞான ரூபி பரிமளா, முருகேசன் மற்றும் காவல் துறையினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com