ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி பனங்காட்டுப் படை கட்சி வேட்பாளா் ஹரி நாடாா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஆலங்குளம் ஒன்றிய தெற்குப் பகுதியான ஓடைமறிச்சான், மருதம்புத்தூா், புதுப்பட்டி, காத்தபுரம், கண்டபட்டி மற்றும் பாப்பாக்குடி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், தான் வெற்றி பெற்றால் தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என வாக்காளா்களிடம் தெரிவித்தாா். அப்போது, நிா்வாகிகள் ஆனந்த், ஜோசப் உள்பட பலா் பங்கேற்றனா்.