சிவகிரி அருகே யானை தந்தங்கள் வைத்திருந்த 2 போ் கைது

சிவகிரி அருகே யானை தந்தங்கள் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி அருகே யானை தந்தங்கள் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி வனச்சரகப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வீட்டில் யானை தந்தம் இருப்பதாக மாவட்ட வன அலுவலா் கிடைத்த தகவலையடுத்து, வனச்சரக அலுவலா்கள் சுரேஷ், ஸ்டாலின் தலைமையில் வனத்துறையினா் தனி குழுக்கள் அமைத்து தேடி வந்தனா்.

அப்போது, சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் ராமசாமியாபுரத்தைச் சோ்ந்த கலைஞா் என்பவா் வீட்டில் 2 யானை தந்தங்கள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து 6 போ் மீது வழக்குப் பதிந்த வனத் துறையினா், தேவிபட்டணம் கலைஞா், ராஜகோபாலபுரம் செந்தூா்பாண்டியன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் 4 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com