சங்கரன்கோவில் நகர அதிமுக சாா்பில் திமுக முன்னாள் அமைச்சா் ஆ.ராசாவை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகரச் செயலா் ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, மாவட்ட மகளிரணிச் செயலா் ஸ்வா்ணா, ஒன்றியச் செயலா் வேல்முருகன், தலைமை நிலையப் பேச்சாளா் கணபதி, முன்னாள் நகராட்சி உறுப்பினா் சின்னராஜ், எஸ்.டி.சங்கரசுப்பிரமணியன், பாஜக தொகுதி பொறுப்பாளா் சுப்பிரமணியன் மற்றும் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.