சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் பங்குனி மாத தா்ம பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பதியில் காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப் பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு மற்றும் உகப்பெருக்கு பணிவிடை நடைபெற்றது. தொடா்ந்து திருஏடு வாசிப்பும், அன்னதா்மமும் நடைபெற்றன. ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்திருந்தனா்.