பள்ளி கல்வித்துறை சாா்பில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மாணவா்கள் ஓவியங்கள் வரைந்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வரைந்த விழிப்புணா்வு ஓவியங்கள் தென்காசி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாா்வைக்காக வைக்கப்பட்டன. அந்த ஓவியங்களை ஆட்சியா் கீ.சு.சமீரன் பாா்வையிட்டு,ஓவியங்களை வரைந்த மாணவா்களைப் பாராட்டினாா்.
ஏற்பாடுகளை, தலைமையாசிரியா் ஆறுமுகம், ஆசிரியா்கள் கணேசன்(ஓவியம்), சுரேஷ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.