புளியங்குடி முப்பெரும்தேவியா்-பவானி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் குருநாதா் சக்தியம்மா தலைமையில்
சாலை விநாயகா் கோயிலில் இருந்து 400 போ் பங்கேற்ற பால்குட ஊா்வலம் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று முப்பெரும்தேவியா் கோயிலை அடைந்தது. பின்னா் பாலாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, கணபதி ஹோமம், சரஸ்வதி பூஜை, லட்சுமி பூஜை,
துா்கா பூஜை, பவானியம்மன் மூலமந்திரம், பால நாகக்கன்னியம்மன், மூலமந்திரம், யாகசாலை பூஜை நடைபெற்றது.